ஊரடங்கு பொழுதுகளில் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும் என்று தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு காவல்துறையினருக்கு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காவல்துறையினருக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
சைலேந்திர பாபு வழங்கிய அறிவுரையில், ‘இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழுமுடக்கம் ஆகியவை அமலில் இருக்கும்போது, மத்திய, மாநில அரசு, நீதித்துறை, உள்ளாட்சி, வங்கி, போக்குவரத்துத் துறை ஊழியர்களை அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்கவேண்டும்.
பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள், பத்திரிகை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அடையாள அட்டையைப் பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்கள், கறிக்கோழிகள், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது.
வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lockdown, Sylendra Babu