அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கு விசாரணை தள்ளிப்போவதால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும், வழக்கை அவசர வழக்காக கருதி புதன்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், டிசம்பர் 6ம் தேதி தம்மால் ஆஜராக முடியாது என்றும், விசாரணையை டிசம்பர் 13ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிக்க : தமிழகத்திற்கு பிரதமர் வந்தபோது பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
வாதங்களை கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற அமர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் வழக்கை புதன்கிழமை விசாரிக்க முடியாது என்றும், நீங்கள் கூறுவது போல் எங்களால் செயல்பட முடியாது எனவும் கூறினர்.
மேலும், இந்த வழக்கிற்கு டிசம்பர் 6ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீடிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Admk Party, AIADMK, Edappadi Palaniswami, O Pannerselvam, Supreme court