பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சித் தலைவர்களையே சாரும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், பொங்கல் பரிசை விநியோகிக்கும் வகையில், நியாயவிலைக் கடைகளுக்கு வரும் 13ம் தேதி வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் தெரு வாரியாக குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளொன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப இடையூறுகளால் கைரேகை சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட முடியாத நேரங்களில், பதிவேட்டில் ஒப்பம் பெற்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் பெரியகருப்பன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில்,
பொது மக்களுக்கு முறையாக பொங்கல் தொகுப்பு சென்றடைகிறதா ? என்பதை கண்காணிக்கவும் ; பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMK, Pongal Gift