முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனம்: இந்தி பேசக் கூடியவர்கள் 66% தேர்ச்சி பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது - சு.வெங்கடேசன்

தெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனம்: இந்தி பேசக் கூடியவர்கள் 66% தேர்ச்சி பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது - சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன் எம்.பி.

சு.வெங்கடேசன் எம்.பி.

தெற்கு ரயில்வேயின் டெக்னீசியன் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,556 பேரில் 1,686 பேர் இந்தியில் எழுதியவர்கள் என மத்திய அரசு தகவல் தந்துள்ளது.

  • Last Updated :

தெற்கு ரயில்வேயின் டெக்னீசியன் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 2,556 பேரில் 1,686 பேர் இந்தியில் எழுதியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2018ல் பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றவர்களின் விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தார்.

Also read: மேம்பாலம் திறப்பு விழா: கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை - முதலமைச்சர் மீது டிடிவி தினகரன் விமர்சனம்

இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த அமைச்சர் பியூஸ் கோயல், தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 139 பேர் என குறிப்பிட்டிருந்தார். தேர்ச்சி பெற்றவர்கள் எந்தெந்த மாநிலங்களின் முகவரிகளைக் கொண்டவர்கள் என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் தரவில்லை. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், இந்தி பேசக் கூடியவர்கள் 66 சதவீதம் டெக்னீசியன் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும் கூறுகையில், ரயில்வே நியமனங்களில் தொடர்ந்து அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாகவே தேர்ச்சி பெறுவது நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியதோடு, இந்தி பேசுபவர்களின் பணி நியமனத்தை தென்னகத்தில் அதிகமாக்கும் விதமாக இது உள்ளது என சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

First published:

Tags: Piyush Goyal, Southern railway, Su venkatesan