திண்டுக்கல்லில் மாநகராட்சி அரசுப்பள்ளியில் கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கழிவறைகளை தண்ணீர் ஊற்றி துடைப்பத்தைக் கொண்டு சீருடையில் மாணவிகள் சுத்தம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மாணவிகளைக் கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவிட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.