முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாததால், மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை விரிவான விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அப்போதைய அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

Also Read:  Sasikala : தொண்டர்கள் என் பக்கம்... அதிமுக நிர்வாகிகள் பயத்தில் பேசுகிறார்கள் - சசிகலா

அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.மேலும், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .

வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஏற்கனவே அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும், இந்த விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும் எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டாலும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் எனவே வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 4 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: ADMK, Chennai High court, Coimbatore, S.P. Velumani, Tender Scam