முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை அலெர்ட்..!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை அலெர்ட்..!

மழை

மழை

Tamilnadu Weather Update | வரும் 10ஆம் தேதி வரையிலான மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக குளிர் வாட்டி எடுத்து வரும் அதே வேளையில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. பகல் நேரங்களில் மிதமான வெயிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,   “இன்று மற்றும் நாளை  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

மேலும்,  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 8 முதல் 10ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசான,  மிதமான மழை   பெய்யக்கூடும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானல் பகுதிகளில் மழை பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கைகள் ஏதும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.

First published:

Tags: Rain, Weather News in Tamil