சிவசங்கர் பாபாவின் மின்னஞ்சலில் ஆபாச சாட் இருந்தது கண்டுபிடிப்பு...
சிவசங்கர் பாபாவின் மின்னஞ்சலில் ஆபாச சாட் இருந்தது கண்டுபிடிப்பு...
போலீஸ் காவல் முடிந்ததால் சாமியார் சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில், சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரும், சாமியாருமான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர். சென்னை அழைத்துவரப்பட்ட அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த 28-ஆம் தேதி முதல் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும், நேற்று கேளம்பாக்கம் பள்ளிக்கு அழைத்துச்சென்று அவரது அறையில் விசாரணை நடத்தியதோடு லேப்டாப், பெண் டிரைவ் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
தனது இ-மெயிலில் இருந்து சில மாணவிகளுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு ஒருநாள் முன்னதாகவே புழல் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.