சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை என நான்கு பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
கீழடியைத் தவிர மற்ற இடங்களில் முதன் முதலாக தற்போது பணிகள் நடைபெறுகின்றன. மணலூரில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் மே 22 முதல் நடந்துவரும் நிலையில், இன்று சுடுமண் உலை ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை இது மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்தச் சுடுமண்ணால் ஆன உலை எதற்காகப் பயன்படுத்தபட்டது என்ற கேள்விக்குப் பதிலளித்த தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம், அணிகலன்களை வடிவமைப்பதற்கும் உலோகங்களைத் தயாரிக்கவும் இந்த உலை பயன்பட்டிருக்கலாம். இனிமேல்தான் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Excavation, Keezhadi, Sivagangai