தொடர் மழையின் காரணமாக விருசுழி ஆற்றில் 15 வருடங்களுக்கு பிறகு தண்ணீர் ஓடுவதைப் பார்த்து கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை பகுதிகளில் செல்லும் விருசுழி ஆறு, மாவட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், கல்லல், தேவகோட்டை வழியாக புதுக்கோட்டை மாவட்டம் திருப்பனவாசல் சென்று இராமநாதபுரம் மாவட்டம் SP.பட்டணம் வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் இந்த ஆற்றில் தண்ணீர் வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் வருவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆற்றில் தண்ணீர் வருவதை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
செய்தியாளர் : முத்துராமலிங்கம் (காரைக்குடி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.