கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4.5 மீட்டர் நீளத்தில் இருக்கும் வளையத்தை, காதில் அணிவதற்காக தமிழர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழர்களின் நகர நாகரிகத்திற்கு எடுத்து காட்டாகவும் திகழ்ந்து வருவது கீழடி அந்த வகையில் கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு காதில் அணியும் தங்க வளைய ஆபாரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில் சுமார் 2000ஆண்டுகளுக்கு முன்பே நம்
தமிழர்கள் தங்கத்தை பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக இந்த பொருள் காதில் அணிவிப்பதற்காக பயன்படுத்தி இருக்க கூடும் என தெரிய வருவதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல்
கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உழவுக்கருவிகளும், மண்பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொந்தகையில் மனித எலும்புக் கூடுகள், இரும்பு வாள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
மாநிலம் முழுவதும் இன்று இறைச்சி, மீன் கடைகள் அடைப்பு...
கீழடி அருகே அகரத்தில், பாசிகள், மணிகள், மண்பாண்டங்கள், கிண்ணங்கள், கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.