முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பூட்டிய வீட்டினுள் புகுந்து சாராயம் காய்ச்சிய சம்பவம் - பட்டதாரிகள் கைது

பூட்டிய வீட்டினுள் புகுந்து சாராயம் காய்ச்சிய சம்பவம் - பட்டதாரிகள் கைது

கைதானவர்கள்

கைதானவர்கள்

"அரசின் டாஸ்மாக் கடைகளும் கடந்த 20 நாட்களாக மூடப்பட்டுள்ளன"

  • 1-MIN READ
  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பூட்டியிருந்த வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்து சாராயம் காய்ச்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு கரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் அரசின் டாஸ்மாக் கடைகளும் கடந்த 20 நாட்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் பலரும் போதைக்காக பரிதவித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் மானாமதுரை வட்டாரத்தில் கிளங்காட்டூர், மேலப்பிடாவூர், விளாக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். கடந்த 20 வருடங்களாக சாராயம் காய்ச்சுவதை விட்டு விட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டதால் பழைய வியாபாரிகள் பலரும் மீண்டும் சாராயம் காய்ச்ச தொடங்கியுள்ளனர்.

மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் கடந்த இரு நாட்களில் சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்ததுடன் 100 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர்.

இந்நிலையில் அன்னவாசல்புதூர் செல்லும் ரோட்டில் பூட்டி கிடக்கும் வீட்டில் மர்மநபர்கள் நடமாடுவதாக வந்த தகவலையடுத்து இன்று காலை போலீசார் சோதனை நடத்தினர். உள்ளே காய்ச்சப்பட்ட சாராயம் மற்றம் சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர். க

ன்னியாகுமரியில் வசிக்கும் வழக்கறிஞரின் வீடு இது என்றும் அவர் வீட்டிற்கு எப்போதாவது வருவது வழக்கம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சாராயம் காய்ச்சியதாக கிளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தவமணி, நாகேஸ்வரன் கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் 3 பேரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Lockdown