வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன
மழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், விருதுநகரை சேர்ந்த மாணவர் ஒருவர், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டி காட்டி ஆட்சியரிடம் விருதுநகரிலும் கனமழை பெய்து வருவதாக விடுமுறை கேட்டுள்ளார்.
இந்த மாணவனின் கேள்விக்கு, வழக்கம் போல் அவரது பாணியிலே விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி பதிலளித்துள்ளார். அதில், விடுமுறைக்காக உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைளுக்கு நன்றி, நம்முடைய மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப்பாடத்தை முடியுங்கள்.. ஆசிரியர்கள் அதனை சரிபார்ப்பார்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் பதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஏற்கனவே இதேபோன்று விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம், ‘பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், நாளை உனது பெற்றோருடன் வந்து என்னை சந்திக்கவும்’ என்று விளையாட்டாக பதில் தெரிவித்திருந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.