முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சொத்தை அபகரித்த துணை நடிகை: காவல் ஆணையர் அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்

சொத்தை அபகரித்த துணை நடிகை: காவல் ஆணையர் அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்

சொத்தை அபகரிக்க முயற்சி

சொத்தை அபகரிக்க முயற்சி

வாடிகைக்கு வீடு எடுத்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததோடு தற்போது வீட்டையும் ஆக்கிரமித்துள்ளதாக துணை நடிகை மீது வயதான தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை துணை நடிகை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வயதான தம்பதியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலம் கணபதி தெருவில் வசித்து வருபவர்கள் மணி(71)-கஸ்தூரி(70) என்ற  வயதான தம்பதியினர். இவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த 1978ஆம் ஆண்டு மேற்கு மாம்பலத்தில் சுமார் 3,000 சதுர அடியில்  சொந்தமாக குடியிருப்பு கட்டி வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். குடியிருப்பில் வாடகைக்கு விட்டு வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நகை செய்யும் தொழில் செய்து வந்த தனது கணவர் சமூக சேவைகள் செய்து வந்ததாகவும்,அதன் மூலம் ருக்மணி என்ற துணை நடிகை பழக்கமாகியுள்ளதாகவும் .அதன் பிறகு ருக்மணி மசாஜ் பார்லர் நடத்தி வந்ததாகவும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ,அவருடனான பழக்கத்தை கணவர் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு மணி தான் தனது கணவர் என கூறி கொண்டு போலி ஆவணங்களை வைத்து வழக்கறிஞர் என்ற பெயரில் ரவுடிகளுடன் வீட்டிற்குள் ருக்மணி நுழைந்ததாக ருக்மணி தெரிவித்துள்ளார்.  50 லட்ச ரூபாய் பணம் தரவேண்டும் எனவும் இல்லையென்றால் பொய் வழக்கில் சிறையில் தள்ளி விடுவோம் என மிரட்டியதாகவும் இதற்கு அசோக்நகர் உதவி ஆணையராக இருந்த வின்செண்ட் ஜெயராஜ் மற்றும் ஆய்வாளர் சூரிய லிங்கம் உடந்தையாக செயல்பட்டு சொத்தை அபகரிக்க உதவியதாகவும்  குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தாங்கள் வசித்து வரும் குடியிருப்பு 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதாலும், இடியும் தருவாயில் இருக்கின்ற காரணத்தினால், இடிப்பதற்காக சென்னை மாநகராட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துணை நடிகை ரவுடிகள் மற்றும் காவல்துறை உதவியோடு சொத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, சட்ட விரோத செயல்களில் வீட்டிற்குள்ளேயே ஈடுபட்டு வருகிறார். மேலும் சென்னை மாநகராட்சி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டதால் வேறுவழியின்றி வாழ்வாதாரத்தை இழந்து வாடகை வீட்டில் சென்று தங்கியுள்ளதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: வடமாநில மாணவர்களால் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவுகிறது: மா.சுப்பிரமணியன்

இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அசோக் நகர் காவல் நிலையத்தில் துணை நடிகை  மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த குமரேசன் ரவி ஆகியோர் மீது கடந்த  ஆண்டு இறுதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் வயதான தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காவல் துறையில் தொடர்ந்து முறையிட்டு அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் உத்தரவின் பேரில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் துணை நடிகை மற்றும் கூட்டாளிகள் தொடர்ந்து மிரட்டிக்கொண்டு வெளியே செல்லாமல்  உள்ளனர்.  காவல்துறையின் உதவியுடன் கட்டிடத்தை இடிக்க நீதிமன்ற அனுமதி பெற்றும்,சென்னை மாநகராட்சியின் உத்தரவை செயல்படுத்த அனுமதிக்காமல் காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணி உதவியுடன் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க: ஜெயலலிதா பெயரில் இயங்கி வந்த அம்மா இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிமுக பிரமுகர்

சுமார் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என பேரம் பேசி வருகின்றனர். ஏற்கனவே, 15 லட்சம் ரூபாய் அளவில் கொடுத்த பிறகும் தொடர்ந்து ஆக்கிரமிப்பை கைவிடாமல் மிரட்டி வருகின்றனர். சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தும், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள துணை நடிகை உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் சொத்துக்களை மீட்டு தருவதோடு, உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளனர்.

வயதான தம்பதியினரின் சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்த முன்னாள் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் ஆகியவை சட்டவிரோதமாக செயல்படுவதற்கு லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Police complaint