சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் லியோ பள்ளி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி என இரண்டு பள்ளிகளிலும் LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலை வகுப்புகளுக்கான கணித ஆசிரியராக அம்பத்தூரை சேர்ந்த மதிவாணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற அரசு அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
Also Read: கைக்குழந்தை இறந்தநிலையில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்
இதற்காக மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்காக பள்ளியின் சார்பில் வாட்ஸ் அப் குரூப்பும் உள்ளது. இதில் பள்ளியின் சார்பாக ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கான வினாத்தாள்கள் வீட்டுப்பாடங்கள் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப் குரூப் மூலமாக பகிர்ந்து வருகின்றனர். 30 மாணவிகள் 30 மாணவர்கள் பள்ளியின் முதல்வர் ஜெஸ்ஸி சாரதியும் இந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வாட்ஸ்அப் குரூப்பில் கணித ஆசிரியர் மதிவாணன் இரண்டு ஆபாச வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார்.
இதைப்பார்த்த மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்து பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளியின் முதல்வர் அந்த குரூப்பில் இருப்பதால் அவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக பள்ளியின் முதல்வர் ஜெஸ்ஸி சாரதி ஆசிரியர் மதிவாணணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் தவறுதலாக ஆபாச வீடியோவை ஆசிரியர் மதிவாணன் பகிர்ந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மதிவாணனை பள்ளி நிர்வாகம் உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளனர்.
மேலும் பள்ளி நிர்வாகம் உடனடியாக இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆசிரியர் மதிவாணன் மீது புகார் அளித்து அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பத்தை தவறுதலாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர் மதிவாணன் மீது திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோன்று கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் இதேபோன்று மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்: கன்னியப்பன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.