சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் நிலையங்களில் டெபாசிட் செய்யப்படும் மெஷின் ஆனது ஜப்பானை சேர்ந்த ஓ.கே.ஐ.(OKI) என்ற நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதும் அந்த OKI மெஷினில் பணமெடுக்கும் பகுதியிலுள்ள சென்சார் 20 வினாடிகள் மட்டும் பணத்தை சோதனை செய்யும் எனவும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பணம் எடுக்கும்போது சென்சாரில் கை அல்லது வேறு ஏதேனும் பொருளை வைத்து மறைத்தால் அப்போது எடுக்கப்படும் பணத்தை அவை கணக்கில் கொள்ளாமல் வங்கியிலேயே அதற்கான இருப்புத் தொகையை சேர்த்து விடுவதும் தெரியவந்தது.
இயந்திரத்தில் வெளியே வந்த தொகை எடுத்தது சென்சார் இயந்திரத்திற்கு தெரியாததால், மீண்டும் எடுக்கப்பட்ட தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கே வரவு வைக்கப்படுகிறது இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்து கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் மட்டும் தரமணி, வடபழனி, விருகம்பாக்கம், பெரிமேடு போன்ற இடங்களில் ரூ.48 லட்சம் வரை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஓ.கே.ஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடிஎம் இயந்திரத்தில் மட்டுமே இந்த கொள்ளை அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வங்கி பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரங்கள் ஜப்பானிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய வகை இயந்திரங்கள் என்றும் இதில் இத்தகைய குறைகள் இருப்பது அதிர்சியானது என்றும் தெரிவிக்கின்றனர் வங்கி அதிகாரிகள்.
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் மட்டும் 21 ஏடிஎம்-களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தமாக 495 முறை மோசடி செய்து பணம் எடுத்துள்ளனர். மொத்தமாக 50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் ஏடிஎம் மையங்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதிகப்பட்சமாக பெரியமேடு ஏடிஎம் மையத்தில் 190 முறை 18 லட்சத்து 68 ஆயிரம் கொள்ளையடித்துள்ளனர்.
இதனிடையே எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணம் திருடப்பட்டது தொடர்பாக ஹரியானாவில் தலைமறைவாக இருந்த ஒருவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபரை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளதாகவும் கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். ஏடிஎம்களில் பணம் திருடப்பட்டது தொடர்பாக சென்னையில் மட்டும் 16 புகார்கள் வந்துள்ளதாக கூறிய போலீசார், அதில் முறையான ஆவணங்களுடன் 7 புகார்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.