நாகை மாவட்டம் காமேஷ்வரம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் துரைராஜ். இன்று அவர் வழக்கம்போல காமேஷ்வரம் பகுதியில் சுகாதார பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அவர், சாலையில் கிடக்கும் மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் தினமும் அந்த பகுதியில் மது அருந்தும் அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பிரபு என்பவருக்கும், துரை ராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறவே அருகில் இருந்த கட்டையை எடுத்து தூய்மை பணியாளர் துரைராஜை பிரபு தாக்கியுள்ளார்.
தாக்குதலில் இரண்டு கால்களில் காயமடைந்த துரைராஜை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கீழையூர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.