திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வேலூர் மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமையில் நடைபெற்றத. அதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
சரத்குமார் பேசுகையில், புரட்சி செய்த வேலூரிலிருந்து முதல் ஆலோசனை கூட்டத்தை தொடங்குகிறோம். மக்களோடு மக்களாக 1996ஆம் ஆண்டிலிருந்து பயணித்து வருகிறோம்.
13ஆண்டு கடந்த 14 ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. சாதி மதம் கடந்து சமத்துவம் இருந்தால் மட்டும்தான் ஒன்றாக வாழ முடியும். எதையும் சாதிக்க வேண்டும் என்றால் உழைப்பு, உறுதி,நம்பிக்கை இருக்க வேண்டும். பணத்தை கொடுத்தால் வாங்காதீர்கள். நம்பிக்கையை வளர்த்தது கொள்ளுங்கள்.

ராதிகா சரத்குமார்
ரசிகர்கள் என்பது ரசிப்பதற்கு மட்டும்தான். அரசியல் வாதிகாளாக மாறுங்கள் அப்போதுதான் மக்களுக்கு உதவமுடியும். ரசிகர்களாக இருக்காதீர்கள் அரசியல் வாதிகளாக மாறுங்கள் என்று பேசினார்.
மேலும் படிக்க....கல்லூரி கட்டணத்தை செலுத்தினால்தான் சான்றிதழ்! - கூலி வேலைக்கு சென்ற மாணவி
அவரை தொடர்ந்து பேசிய மாநில மக்களிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார், எங்கள் தலைவர் சாதி, மதம் பார்க்காமல் பழகுபவர் என்று கூறினார். நான் டிவி தொடர்களில் நடிப்பதில் இருந்து, சிறிது காலம் விலகி, கட்சியில் என் தலைவருடன் பணியாற்றுவேன்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.