சேலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் அதிரடி
சேலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் அதிரடி
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைருக்கு 20 ஆண்டுகள் சிறை
கடந்த 2020ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை விவசாய நிலத்தை சுற்றி காண்பிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காரிப்பட்டி காவல்துறையினர் மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் வீராணம் அருகே உள்ள நீர்மூள்ளிகுட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(35), போர்வெல் வாகனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை விவசாய நிலத்தை சுற்றி காண்பிப்பதாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காரிப்பட்டி காவல்துறையினர் மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் காவல்துறையினர் விரைவாக குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகை மற்றும் 2.50 லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி முருகானந்தம் அரசுக்கு பரிந்துரை செய்தார்.
-செய்தியாளர்: திருமலை.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.