சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தில், 2 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி இளங்கோவன். இவர் கள்ளக்குறிச்சி பகுதியில் கொள்முதல் செய்த தேங்காய்களை தனது கூலி ஆட்கள் மூலம் மினி லாரியில் ஏற்றி கொண்டு வாழப்பாடி நோக்கி ஆத்தூர் வழியாக சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் என்னுமிடத்தில் மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்ததில் மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினி லாரியின் மேல் பகுதியில் அமர்ந்து சென்ற வாழப்பாடி பகுதியை சேர்ந்த துரைசாமி (54], பெரியசாமி (37), பூபதி (35) சித்திரா (25), ரத்தினம் (60), சந்திரா (40) உள்ளிட்ட 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆபத்தான நிலையில் இருந்த முத்தம்பட்டியை சேர்ந்த பூபதி என்பவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆத்தூர் ஊரக போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேங்காய்கள் சாலை முழுவதும் சிதிறி கிடந்ததால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனம் மற்றும் தேங்காய்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.