முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் - ராமதாஸ்

தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் - ராமதாஸ்

ராமதாஸ்

ராமதாஸ்

தனி இட ஒதுக்கீட்டை முன்பே பெற்றிருந்தால் யாரிடமும் கூட்டு சேரவேண்டிய தேவை இருந்திருக்காது. பாமக வினர் வெற்றி பெற கூடாது என்று கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறுகின்றன என்று ராமதாஸ் கூறினார்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாமக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, கூட்டணிக் கட்சிகள், கூட்டணித் தர்மத்தை மீறியதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் என்றும் கூறியுள்ளார்.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொது குழு கூட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  இரண்டு வருடங்களுக்கு பிறகு மருத்துவர் ராமதாசை சந்திக்க ஏராளமான தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

சேலம் மாநகரம் , ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாமக தொண்டர்கள் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில், பாமக தலைவர் கோ.க மணி பேசிய போது, சேலத்தில் இரண்டு சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. இதன்பின்னர்  பாமகவிற்கு சேலம் மாவட்டத்தின் திருப்பு முனையாக அமைய உள்ளது என்றார்.

மருத்துவர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றிய போது, பாமக ஆட்சி நடைபெற வேண்டும் அதற்க்காக தனித்து நின்று அன்புமணியை முன்னிலை படுத்தி தேர்தலிலும் போட்டியிட்டோம். கடுமையாக உழைத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களை கூட அப்போது பெறவில்லை, வட தமிழ்நாட்டில் வாழும் அனேக மக்களும் வன்னியர்கள், ஒட்டு மொத்த மக்களும் வாக்களித்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்.

அனைத்து சமுதாயத்தினரும்  ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்று 45 வருடங்களாக போராடி வருகின்றேன். அதற்காக போராடி உயிர் பலி கொடுத்தும் உள்ளோம். அப்படி போராடிய நான், சரியாக  வழி நடத்தவில்லையா, என்ன தவறு செய்தேன், வழி நடத்திய என்னிடம் என்ன தவறு உள்ளது? என  தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார்.

தனி இட ஒதுக்கீடு என 10.5 விழுக்காடு பெற்றும் நீதிபதி அதற்க்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளார். தனி இட ஒதுக்கீட்டை முன்பே பெற்றிருந்தால் யாரிடமும் கூட்டு சேர தேவை இருந்து இருக்காது.

பாமக வினர் வெற்றி பெற கூடாது என்று கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறுகின்றன. அதனாலேயே 20 தொகுதியில்  வெற்றி பெற வேண்டிய பாமக 5 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது என்றார்.

234 தொகுதியில் பாமக விற்கு வெறும் 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட பிறரிடம் அதிக சீட்டு வேண்டும் என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது வேதனையாக உள்ளது.  இந்நிலையால் மானம் உள்ளவராக , கோபம் வர வேண்டாமா, ரோசம் வர வேண்டாமா? என்றார்.

இன்னும் நாம் ஏமாளிகளாக இருந்தது போதும் , வீர வன்னியர்களாக தமிழகத்தை ஆளுவேன் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பணத்திற்காக ஆசைபட்டு , மானத்தை வீரத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டோம், இனி வரும் காலத்தில் பணம் முக்கியம் இல்லை. இனம் தான் முக்கியம், மானம் தான் முக்கியம் என்று வீரத்துடன் செயல்படுவோம் என்றார்.

இதுவரை எந்த கட்சி வன்னியர்களுக்காக போராடியது,  நான் தான் தான் தொடர்ந்து போராடி வருகிறேன். வன்னியர்களுக்கு இன்னொரு ராதமாஸ் பிறக்க போவதில்லை , இனி முடிவு செய்ய வேண்டியது வன்னியர்கள் தான். வன்னியர்கள் வேறு கட்சியில் இருந்தாலும் சரி, பாமக விற்கு வர வேண்டாம், வாக்கு மட்டும் பாமக விற்கு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

நாள்தோறும் அறிக்கை வெளியிடுகிறேன், அதில் வன்னியர்களுக்காக மட்டுமா அறிக்கை வெளியிடுகிறேன், ஒட்டு மொத்த  தமிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன்.

எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இல்லாத அக்கறை தனக்குதான் உள்ளது.

Read More : இந்தியாவை அச்சுறுத்தும் விட்டமின் ‘டி’ குறைபாடு.. போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அனைவரையும் ஆதரித்துவிட்டீர்கள் ஒரு முறை அன்புமணியை ஆதரியுங்கள், என கேட்டுக் கொண்டார். பிற கட்சி வன்னியர்களை சந்தித்து ஆதரவு திரட்டுங்கள், பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை கொண்டு வரவேண்டும், அதற்க்காக  வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.

Must Read : வாயோடு வாய் வைத்து மூச்சுகொடுத்து குரங்கின் உயிரைக் காப்பாற்றிய மனிதர் - நெகிழவைக்கும் வீடியோ

பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக தலைவர் கோ.க.மணி,  துணை தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் நடராஜ , அண்ணாதுரை, விஜயராஜா, பசுமை தாயக மாநில துணை அமைப்பாளர் சத்திரியசேகர், மாநகர முன்னாள் செயலாளர் ரத்தினம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

First published:

Tags: Dr Ramadoss, Pattali Makkal Katchi‎, PMK