மு.க. அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன் - மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர்
மு.க. அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன் - மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர்
சு.வெங்கடேசன், எம்.பி.,
மதுரையை வளர்ச்சியடைந்த நகரமாக மாற்றுவதற்கான திட்டங்களை முன்வைத்து, தேர்தலை சந்திப்போம் என்றும் வெங்டேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரு வேட்பாளராக அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று எழுத்தாளர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மு.க. அழகிரியிடம் ஆதரவு கேட்க உள்ளதாக மதுரை மக்களவை தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
தனது பரப்புரையை இன்று தொடங்கிய அவர், நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
மார்க்சிஸ்ட் சார்பில், தான் வேட்பாளராக தேர்வானதற்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்றார்.
மேலும், தனது பரப்புரைக்கு எழுத்தாளர்களும் வருவதாக உறுதியளித்துள்ளதாக கூறினார். மதுரையை வளர்ச்சியடைந்த நகரமாக மாற்றுவதற்கான திட்டங்களை முன்வைத்து, தேர்தலை சந்திப்போம் என்றும் வெங்டேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு வேட்பாளராக அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.