பழனி முருகன் கோயில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக வரும் ஜூன் 16-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை 45 நாட்கள் ரோப்கார் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின் இழுவை ரயில் படிப்பாதை, மற்றும் யானைப் பாதை வழியாக பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தொந்தரவு அளித்து வந்த குரங்குகள் கூண்டு வைக்கப்பட்டு பிடிக்கப்பட்டு வருகிறது. பழனி மலைக்கோவிலில் மயில், குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் தங்களுடன் தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களையும், திண்பண்டங்கள், பொங்கல் மற்றும் உணவுகளையும் கொண்டுவருகின்றனர்.
Also Read : வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் - மாணவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை மலை மீது சுற்றி திரியும் குரங்குகள் பறித்து செல்வதாகவும், சில நேரங்களில் செல்போன், பர்ஸ் போன்ற பொருட்களையும் குரங்குகள் பறித்து சென்று பக்தர்களுக்கு தொந்தரவு செய்வதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனபகுதியில் விட கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
வனத்துறையினர் உதவியுடன் மலைக் கோவிலில் குரங்குகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டன. கூண்டுகள் மூலம் அனைத்து குரங்குகளும் பிடிக்கப்பட்ட பின்பு கொடைக்கானல் வனபகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Palani, Palani Murugan Temple