தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இரண்டு நாட்களில் வலுப்பெறக் கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் தாக்கிய கஜா புயல், டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது வலுப்பெற்று புயலாகவும், 12-ம் தேதி தீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை புயலாக மாறினால் சென்னை - விசாகப்பட்டினம் இடையே நெல்லூரில் கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு தாய்லாந்து சார்பில் பேய்ட்டி என பெயர் சூட்டப்பட உள்ளது. இருப்பினும் தாழ்வு நிலை வலுப்பெறுவதைப் பொறுத்தே புயலுக்கான வாய்ப்பு குறித்து உறுதியாக கூற முடியும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தற்போதைய சூழலில், இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.