ஜார்கண்ட் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகத்தின் 50 ஆண்டுகள் சேவையைப் பெருமைப்படுத்தும் நோக்கில் சென்னை தனியார் விடுதியில் பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவில் பேசிய நீதிபதி கற்பக விநாயகம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல நடிகராக விரும்பினேன். அரசு வழக்கறிஞராக நியமித்ததன் மூலம் நீதிபதியாகி, தலைமை நீதிபதியாக உயரக் காரணம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்தான் என்றும், வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் எனவும் அவர் பேசினார்.
முன்னதாக சிறப்புரையாற்றிய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், பணி ஓய்வுபெற்ற பிறகும் இன்னும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைமுறைகளை கவனிப்பவர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர்மோகன், பரதசக்கரவர்த்தி, மஞ்சுளா புகழேந்தி, ஜெயச்சந்திரன், சுரேஷ் குமார், எஸ்.எஸ்.சுந்தர் தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Sivaji ganesan, Chief Justice, MGR