தமிழகத்தில் கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்துகள் காலாவதியாகி வீணடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை தரப்பில் கொரோனா காலத்தில் வாங்கிய ரெம்டிசிவிர் மருந்து விபரங்களை ஆர்.டி.ஐ தகவல் மூலமாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்கட்சி பெற்றுள்ளது. அதில் கிடைத்துள்ள பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஜூன் முதல் 2021 மே மாதம் வரை 32 முறை ரெம்டிசிவிர் மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,25,715 ரெம்டெசிவிர் மருத்து குப்பிகளை பயன்படுத்தும் தேதி முடிந்ததால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 220 கோடி ரூபாய்க்கு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 6 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியானதால் வீணாடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.இந்த மருந்துகள் வீணான காலத்தில் தமிழகத்தில் இரண்டாவது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்துள்ளது. மேலும், மருந்துகள் அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி கோராமல் அவசரத்திற்காக வாங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: COVID-19 Second Wave, Remdesivir, Tamilnadu