தெற்கு வங்கக்கடல் பகுதியில் (4.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் என
சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக, இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பலத்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தூத்துக்குடியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் கடந்த 10 மணி நேரத்தில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எட்டயபுரம் - 19 செ.மீ, குலசேகரப்பட்டினம், ஸ்ரீவைகுண்டத்தில் 14 செ.மீ, சாத்தன்குளத்தில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.