மனநிலை சரியில்லாத தன் மகனை மந்திரிக்க தர்காவுக்கு அழைத்த தந்தையின் கழுத்தை வெட்டி துடிக்க துடிக்க கொன்ற மகன் ராணிப்பேட்டையில் பரபரப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் இக்பால் (வயது70). பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இருமகள்கள் மற்றும் மூத்த மகன் வெளியூரில் உள்ள நிலையில், இக்பால் தனது கடைசி மகனான இம்ரானுடன்(25) வேப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இக்பாலின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் முனமுடைந்த இம்ரான் தாய் மறைவிற்கு பின் சற்று மன நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தந்தையான இக்பால், மகன் இம்ரானை அவ்வப்போது மந்திரிக்க தர்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். குணம்பெறவில்லை என கூறி தொடர்ந்து தர்காவிற்கு வருமாறு தந்தையான இக்பால், வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று தர்காவிற்கு மந்திரிக்க அழைத்த போது, ஏற்கனவே மனக்குழப்பதில் இருந்த இம்ரான் கடும் கோபத்தோடு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இக்பால், இம்ரானை தொழுகைக்கு செல்ல வலியுறுத்தியால் ஆத்திரம் அடைந்த இம்ரான் தனது தந்தை இக்பாலை வீட்டில் இருந்த கத்தியை கொண்டு கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலைக்குலைந்த இக்பால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் விரைந்து சென்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை குற்றத்தில் ஈடுப்பட்ட இம்ரானை கைது செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமலான் நோன்பு காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தர்காவிற்கு அழைத்ததால், பெற்ற தந்தையை மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: க.சிவா ( ராணிப்பேட்டை )
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.