தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அதிகாலை முதலே மசூதிகளில் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரபு நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ஷவ்வால் பிறை தென்படாததால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று, தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்தார்.
இதையொட்டி, தமிழகத்தில் உள்ள மசூதிகளில் இன்று அதிகாலை முதலே சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. மேலும், ஆசிய கண்டத்தில் இந்தியா உட்பட பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளிலும் இன்று ரம்ஜான் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.