'படிக்கட்டில் பயணம் செய்தவர்களை உள்ளே வரச் சொன்ன நடத்துனர்'... ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்
'படிக்கட்டில் பயணம் செய்தவர்களை உள்ளே வரச் சொன்ன நடத்துனர்'... ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்
பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்
Ramanathapuram District : ஆத்திரமடைந்த அரசு பள்ளி மாணவர்கள் மூவர் காட்டுபரமக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பின் கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.
அண்மைக் காலங்களாக பள்ளி வளாகங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குவது, திட்டுவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் காலையில் பள்ளிக்கு வருகின்ற போதும் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போதும் பேருந்துகளில் மாணவர்கள் வரம்புகளை மீறி ஆபத்தான முறையில் படியில் பயணம் செய்வதும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே வருமாறு நடத்துனர் கூறியதால் ஆத்திரத்தில் மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து கமுதக்குடி கிராமத்திற்கு நேற்று மாலை டவுன் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தொங்கியதால் நடத்துநர் திருப்பதி, மாணவர்களை படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்து என உள்ளே வருமாறு அறிவுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து மாணவர்கள் பேருந்தின் பக்கவாட்டில் கையால் அடித்து சத்தத்தை எழுப்பி உள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த அரசு பள்ளி மாணவர்கள் மூவர் காட்டுபரமக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பின் கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.