கமுதி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு!
கமுதி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு
ராமநாதபுரம் கமுதி அருகே முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் உட்பட 6 பேரை அரிவாளால் வெட்டி விட்டு எதிர்தரப்பினர் தப்பிச்சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் கமுதி அருகே முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை அரிவாளால் வெட்டி விட்டு எதிர்தரப்பினர் தப்பிச்சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மரக்குளம் கிராமத்தில் கோவிந்தசாமி தனது வீட்டிற்கு முன்பாக கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதில் ரஞ்சித் இடையூறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ரஞ்சித் தரப்பினர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி மற்றும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சசி, கோவிந்தசாமி மனைவி கலையரசி, மகன் சந்தன பாரதி, உறவினர்கள் ராக்கு, இன்பத்தமிழ் உள்ளிட்ட ஆறு பேரை அரிவாளால் வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதனையடுத்து காயமடைந்தவர்களுக்கு கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மண்டல போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - பொ.வீரக்குமரன்
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.