ராமநாதபுரத்தில் கணவர் நகர்மன்றத் தலைவராக பதவியேற்ற போது மனைவி கட்டித் தழுவி, அழுது ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி தலைவர் பதவியை 53 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது. இன்று காலை நகர்மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பாக 24வது வார்டில் 677வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சேது கருணாநிதி ஒருவரை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நகர் மன்றத் தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார். அவருக்கு கட்சி சார்பாக நிர்வாகிகள் உறவினர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர். அந்த நேரத்தில் வாழ்த்து தெரிவிக்க வந்த அவரது மனைவி வாழ்த்து கூறி வரும் பொழுது நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கணவரான சேது கருணாநிதியின் நெஞ்சில் சாய்ந்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுத காட்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர் இரண்டு முறை நகர்மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Local Body Election 2022, Paramakudi Constituency, Tamilnadu