முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காதலனுடன் இளம்பெண் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய சித்தப்பா - சித்தியால் வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்

காதலனுடன் இளம்பெண் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய சித்தப்பா - சித்தியால் வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காதலனுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :

இளம்பெண் காதலனுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள புத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த 25 வயது பட்டதாரிபெண். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கும் கலையூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பு ராஜா (வயது 25 ) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில்  காதல் மாறியுள்ளது. இருவரும் மனம் உருக காதலித்து வந்துள்ளனர். கருப்பு ராஜா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கருப்பு ராஜா அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி உடலுறவு கொண்டுள்ளார்.

நாளடைவில் அந்தப் பெண்ணிடம் பேசுவதையும்,பழகுவதையும் கருப்பு ராஜா நிறுத்தியுள்ளார். இவர்களின் காதல் அந்தப் பெண்ணின் சித்தப்பா உறவு முறையான கலையூர் கிராமத்தை சேர்ந்த முனியசாமி (வயது 45) என்பவருக்கு தெரிந்ததுள்ளது. உடனே முனியசாமி அந்த பெண்ணிடம் கருப்பு ராஜாவை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என சொல்லி 17.09.2020 அன்று ஊரின் ஒதுக்குப்புறம் உள்ள ஒரு இடத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அதன்படி அந்த பெண்ணும், கருப்பு ராஜாவும் நள்ளிரவு 12 மணிக்கு அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் வருவதை பார்த்ததும் முனியசாமி அருகில் சென்று ஒளிந்து கொண்டார்.

Also Read:  15 வயது சிறுவனுடன் ஆசிரியைக்கு மலர்ந்த காதல்.. போக்ஸோ சட்டத்தில் கைது

நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட கருப்பு ராஜாவும் அந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் மீண்டும் மனம் உருகி பேசி இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். அதை முனியசாமி தனது செல்போனில் வீடியோ படம் பிடித்துள்ளார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த முனியசாமி அவர்களிடம் அவர் எடுத்த வீடியோ படத்தை காண்பித்துள்ளார். அந்தப் பெண்ணும் கருப்பு ராஜாவும் அதை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். உடனே முனியசாமி கருப்பு ராஜாவை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.  இளம்பெண்ணை மட்டும் இருக்க வைத்து அவரை மிரட்டி அவரும் உடலுறவு கொண்டுள்ளார்.

மேலும் இதை வெளியில் சொன்னால் பிரச்சனை பெரிதாகி விடும் என கூறி அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார். அந்தப் பெண்ணும் இந்தசம்பவம் குறித்து வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். பின்பு கடந்த 16.12.2021 தேதி அந்தப் பெண்ணை முனியசாமி மதுரைக்கு வரச் சொல்லியுள்ளார். அதற்கு அந்தப் பெண் எதற்கு என கேட்டுள்ளார். உடனே அவர் உனக்கும் கருப்பு ராஜாவுக்கும் திருமணம் செய்து வைக்கப் போகிறேன் கண்டிப்பாக வரவேண்டும் என கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி அந்த பெண்ணும் மதுரைக்கு சென்றுள்ளார். ஆனால் சென்ற இடத்தில் நீண்ட நேரம் ஆகியும் கருப்பு ராஜா வர வில்லை.

Also Read:  புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் தலையிலிருந்து குண்டு அகற்றம்

உடனே முனியசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டிவிட்டு அவரது செல்போனில் படம்பிடித்துள்ளார். அதைகாட்டி  அங்கேயே வைத்து அந்தப் பெண்ணை முனியசாமி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிய படத்தை முனியசாமி அவரது செல்போனிலேயே வைத்துள்ளார். இந்நிலையில் முனியசாமியின் மனைவி சௌந்தரவல்லி 26.12.2021 தற்செயலாக கணவர் முனியசாமியின் செல்போனை பார்த்துள்ளார். அதில் அந்தப் பெண்ணும் முனியசாமியும் திருமணம் செய்த படி இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே அவர் இதுகுறித்து முனியசாமியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். பின்பு அந்த பெண்ணின் வீட்டிற்கும் சென்று அவரிடமும் சண்டை போட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து இளம்பெண் நடந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் நடந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே முனியசாமியை போலீசார் செய்தனர். தலைமறைவாகியுள்ள கருப்பு ராஜாவை தேடி வருகின்றனர். முனிசாமியின்  மனைவி சௌந்தரவல்லி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

top videos

    செய்தியாளர்:  கு.தமிழ்ச்செல்வன்  (பரமக்குடி)

    First published:

    Tags: Crime News, Lovers, Police, Sexual abuse, Sexual harrasment, Video