இடுப்பில் கல்லை கட்டிய நிலையில் பாம்பன் வடக்கு கடலில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இன்று காலை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் மெரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கடலில் மிதந்து வரும் உடலை மீட்க மெரைன் போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். இறந்து சடலமாக மிதந்து வரும் உடலின் இடுப்பில் கயிறுடன் கல் கட்டி இருப்பதால் இவரை யாரேனும் கொலை செய்து கடலில் தூக்கி வீசினார்களா, நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது பாம்பன் பாலத்தில் இருந்து தற்கொலை செய்வதற்காக கடலில் குதித்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்படும் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்படும் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர். இடுப்பில் கல்லை கட்டிய நிலையில் அடையாளம் தெரியாத உடல் கடலில் மிதந்ததது அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: சேதுகுமரன் (ராமேஸ்வரம்)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.