ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெருமாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலை பெருமாள் நீல நிற பட்டுடுத்தி கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.
வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி காட்சி தந்தார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் குதிரை வாகனத்தில் கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Must Read : மதுரை தேரோட்டம்: பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வரும் மீனாட்சி-சொக்கரின் புகைப்படங்கள்...
நீல நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கியதால் நாடு செழிக்கும் என கருதப்படுகிறது.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kallazhagar, Ramanathapuram, Vaigai