தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில், ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவரது முன் ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி அவரை விருதுநகர் மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் அவர் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரின் செல்போன் தொடர்பு எங்கள் வைத்து தொடர்ந்து கண்காணித்த வந்தனர். 8 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் நடுரோட்டில் வைத்து கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்ட போலீசார் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேரையும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வந்த போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி விருதுநகர் போலீசில் ஒப்படைப்பு
ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டுள்ளார். வரும்20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதனையடுத்து, அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் வகுப்பில் உயர்ரக பாதுகாப்பு சிறையில் ஒதுக்கப்பட்டுள்ளார். அதில்தான் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இன்று முதல் மூன்று நாள்கள் தொடர்ந்து திருச்சி சிறையில் அடைக்கப்படுவார். வரும் திங்கட்கிழமை விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajendra balaji