முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.. 8 மாவட்டங்களுக்கு அலெர்ட்!

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை.. 8 மாவட்டங்களுக்கு அலெர்ட்!

மழை

மழை

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி வரை மிதமான மழையும், 20ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai rains, Rain Update, Weather News in Tamil