முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கைகோர்த்த ரகுராம் ராஜன்!

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கைகோர்த்த ரகுராம் ராஜன்!

ராகுல் காந்தியுடன் ரகுராம் ராஜன்

ராகுல் காந்தியுடன் ரகுராம் ராஜன்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்று தற்போது ராஜஸ்தானை கடந்து வருகிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு காஷ்மீரில் நிறைவடைய இருக்கிறது.

இதையும் படிங்க: அமைச்சரவை மாற்றமா? முடிசூட்டும் விழாவா? : வி.கே.சசிகலா காட்டமான விமர்சனம்!

 இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர்.

அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூரின் படோதி பகுதியில் இருந்து புதன்கிழமை மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டு ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்தார்.

ஆர்பிஐயின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சித்திருந்தார். இந்திய பொருளாதாரம் குறித்தும் கடந்த காலங்களில் கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Gayathri Raguramm, RahulGandhi