இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் கோட்டைப்பட்டினம் வந்தது. தமிழக சட்டத்துறை அமைச்சர்,மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ராஜ்கிரணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ம் தேதி 118 விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதில் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற சுகந்தன்,சேவியர் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்துகப்பல் விசைப்படகு மீது மோதியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.சேவியர்,
சுகந்தன் ஆகிய 2 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் இலங்கை அரசின் கொலைவெறிச்செயலை கண்டித்தும் இறந்த மீனவர் ராஜ்கிரண் மற்றும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேவியர், சுகந்தன் உள்ளிட்ட இரண்டு மீனவர்களை தமிழகம் கொண்டுவந்து உறவினர்களிடம் ஒப்படைக்ககோரியும் இறந்த மீனவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் மீனவரின் உறவினர்களும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட 4 மாவட்ட மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கடைத்தெருவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பெரியார் வாசகத்துடன் முற்றுப்புள்ளி: அமைச்சர் செந்தில் பாலாஜி!
இந்த நிலையில் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை9.30 மணி அளவில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோட்டைபட்டினத்தில் இருந்து ராஜ்கிரன் உடலை பெற்றுக்கொள்ள இன்று காலை இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்கள் மற்றும் இரண்டு மீன்வளத்துறை அதிகாரிகள் சென்றனர். இந்திய சர்வதேச எல்லையில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் இறந்த மீனவர் ராஜ்கிரன் உடலைப் பெற்றுக்கொண்டு கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் படிங்க: தேவமணியை படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
ராஜ்கிரணின் உடலுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மீன்வளத்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்தும்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மீனவரின் உடலைராஜ்கிரணின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. உறவினர் அஞ்சலி செலுத்திய பின்னர் ராஜ்கிரணின் உடல் அவரது சொந்த ஊரான கோட்டைப்பட்டினம் மயானக்கரையில் காவல்துறை பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
செய்தியாளர்: ராஜசேகரன் உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.