புதுக்கோட்டை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் பத்தாண்டுகளாக தண்ணீர் வராத குழாய்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 28ம்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்று மாலையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 15 தினங்களே எஞ்சியுள்ளதால் வேட்பு மனு செய்த வேட்பாளர்களும் வேட்புமனு இன்று செய்யவுள்ள வேட்பாளர்களுமாக தீவிரமாக பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட 34 வது வார்டில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் அப்துல்ஜபார் அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக குடிதண்ணீர் பிரச்சனை உள்ளதாகவும் வெறும் குழாய் மட்டுமே உள்ளது. அதில் தண்ணீர் வரவில்லை என்று கூறி குழாய்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி தான் வெற்றி பெற்றால் அந்த வார்டில் உள்ள குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று பொது மக்களிடம் எடுத்துக்கூறி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Also Read : சுயேச்சை வேட்பாளராக சென்னையில் களமிறங்கிய கானா பாலா
இதேபோல் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் மட்டுமன்றி சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
செய்தியாளர் : ரியாஸ், புதுக்கோட்டை
Local Body Election Updates | உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்திகள் உடனுக்குடன் தெரிந்து
இங்கே க்ளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.