கடலூரில் சூர்யா படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரின் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தியேட்டருக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், மாற்று சமுதாயத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமியை குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் எஸ்.ஐ விஷம் குடித்து தற்கொலை முயற்சி -அரியலூரில் பரபரப்பு
சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் அந்த திரைப்படம் வெளிவந்தது. இதற்காக வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காதவரை அவர் நடிக்கும் திரைப்படங்களை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம், என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில். இன்று கடலூரில் சூர்யா ரசிகர்கள் படம் வெளியிடுவதை கொண்டாட பேனர், பேண்டு என தயார் செய்து இருந்த நிலையில் போலீசார் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தனர். இதன் காரணமாக எப்பொழுதும் கொண்டாட்டங்களுடன் காணப்பாடும் திரையரங்குகள் களையிழந்து காணப்பாட்டன.
பின்னர் காலை 7 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டன. இதற்கு முன்னதாக இருந்த காவலர்கள் திரையரங்குகளில் கூடி இருந்த சூர்யா ரசிகர்களை வரிசைப்படுத்தி அவர்களின் பெயரை எழுதிக்கொண்டு, பின்னர் முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டு திரையங்கு உள்ளே அனுப்பட்ட பின்னரே படம் திரையரங்கில் திரையிடப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.