பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், நிலமில்லா மக்களுக்கு வீடுகட்டுவதற்கு நிலம் வழங்குவதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.இதில், நிலமில்லாத மக்களுக்கு நிலம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஒட்டுமொத்தமாக 5 ,24,000 ஆயிரம் பயனாளிகளில் இதுவரை 2,75,000 பேருக்கு பல்வேறு மாநிலங்களும் நிலம் ஒதுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்னும் நிலம் வழங்கப்படவில்லை.
இதற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 96,806 பேருக்கு நிலம் வழங்க வேண்டியுள்ளது. மேலும், அசாம், ஒடிசா, பீகார் மாநிலங்களிலும் நிலம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாநில அரசுகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பயனாளிகளுக்கு வரும் 15-ம் தேதிக்குள் நிலத்தை ஒதுக்காவிட்டால், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, சிறப்பாக செயல்படும் மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.