பொங்கல் பரிசு தொகுப்பின் டோக்கன் வழங்கும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பை கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த தொகுப்பில் ரூ. 1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், பொங்கல் பரிசு தொகுப்பின் டோக்கன்களை டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 02,03, 04 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதி ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து ஜனவரி 5ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவித்தார். அன்றைய தினத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக பொங்கல் பரிசுக்கான டோக்கன் டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும் எனவும், பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal, Pongal 2023, Pongal Gift