தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான முக்கிய நபரான திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று தொடங்கிய நிலையில், கைதான முக்கிய நபரான திருநாவுக்கரசின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
See Also... பேருந்துநிலையத்தில் அரைகுறை ஆடையுடன் கிடந்தவர்களுக்கு தர்ம அடி
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்படுவார் என்பதால் ஏராளமானோர் குவிந்தனர்.
திருநாவுக்கரசு தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் இருந்ததால் சிறையில் இருந்தே வீடியோ கான்பிரசிங் மூலம் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
திருநாவுக்கரசை 10 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் கோரிக்கை விடுத்த நிலையில், நீதிபதி 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.