பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் மிக அலட்சியமாக வெளியிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், தவறுதலாக பெண்ணின் பெயர் வெளியாகிவிட்டதாக கூறினார்.
Read Also... “எப்போ செய்யப்போறீங்க... எதுக்காக காத்துக்கிட்டு இருக்கீங்க...” முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி
இதனை அடுத்து, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படிக்கும் கல்லூரி, முகவரி என்று முழு விபரமும் அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் பயந்துபோய் புகாரளித்துவிடக்கூடாது என்பதற்காக பெயர்கள் இப்படி அப்பட்டமாக வெளியிடப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்தது.
Read Also... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு சிபிசிஐடி காவல்!
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அரசு தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதற்காகவும், வழக்கின் ஆரம்ப நிலையிலேயே 4 பேருக்கு மட்டுமே தொடர்பு என்று கூறியதற்காகவும் மாவட்ட எஸ்.பி மீது நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டனர்.
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.