கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரத்தின் மைய பகுதியில் உள்ள இராமநாயக்கன் ஏரியில் உள்ள தண்ணீரில் 70 வயது மூதாட்டி இறங்கி நடந்து செல்வதை அப்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த நபர்கள் ஓசூர் மாநகர காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்.
தகவல் அறிந்தவுடன் துரித கதியில் சம்பவ இடத்திற்குச் சென்று நகர எஸ்.ஐ. செல்வராகவன், மற்றும் டிராபிக் எஸ்.ஐ., சக்திவேல், காவலர் கதிரவன் ஆகியோர் ஏரிக்குள் இறங்கி நீந்திச் சென்று மூதாட்டியை உயிருடன் மீட்டனர். பின்னர் உடனடியாக அவரை முதலுதவி சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் தங்களின் காவல் வாகனத்தில் கொண்டு சென்று அனுமதித்தனர்.

முனியம்மா (70)
மூதாட்டி குறித்து விசாரித்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் அவர் என்பதும் அவர் பெயர் முனியம்மா (70) என்பதும் அவர் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. தனது கிட்னியை சிலர் திருட முயற்சி செய்வதால்தான் தற்கொலைக்கு முயன்றதாக மூதாட்டி தெரிவித்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயணைப்புத் துறையினர் வரும்வரை காத்திருக்காமல் விரைந்து தண்ணீரில் நீந்திச் சென்று மூதாட்டியைக் காப்பாற்றிய ஓசூர் மாநகர உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவன், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர் கதிரவன் ஆகிய மூவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.