காதல் விவகாரத்தில் பெற்ற மகளை பீர்பாட்டிலால் குத்திய தந்தை கைது
காதல் விவகாரத்தில் பெற்ற மகளை பீர்பாட்டிலால் குத்திய தந்தை கைது
முரளி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. (வயது 37 )கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் முள்ளிப்பள்ளம் அக்ரகார தெருவில் குடியிருந்து வருகின்றனர்.
மதுரை அருகே காதல் விவகாரத்தில், பெற்ற மகளை பீர்பாட்டிலால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. (வயது 37 )கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் முள்ளிப்பள்ளம் அக்ரகார தெருவில் குடியிருந்து வருகின்றனர்.
இவரின் மூத்த மகள் ராஜேஸ்வரி பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் சமீபகாலமாக ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தந்தையான முரளிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தந்தை முரளி தனது மகளிடம் படிக்கிற வயதில் காதல் போன்ற தேவையில்லாத விஷயத்தில் கவனத்தை செலுத்த வேண்டாம் என்றும் படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியுள்ளார்.
இதனை கேட்காத மாணவி தொடர்ந்து தான் விரும்பியவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வந்த முரளி தனது மகள் ராஜேஸ்வரியை மது பாட்டிலால் குத்தியும் அரிவாளால் வெட்டியும் உள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஸ்வரியை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து சோழவந்தான் காவல் துறையினர் முரளியை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.