செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர
மோடி சென்னை வந்தடைந்தார். அவர் அணிந்திருந்த வேட்டி, சட்டை மற்றும் துண்டில் செஸ் அட்டையை குறிக்கும் வகையில் கருப்பு, வெள்ளை கரை இடம் பெற்றிருந்தது.
செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். முன்னதாக, பிரதமர் அகமதாபாத்திலிருந்து 2.20 க்கு புறப்பட இருந்த நிலையில் 3.10 மணிக்கு புறப்பட்டார். 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 5.10 மணிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு சென்று பின்னர், அங்கிருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் : விமானத்தில் பறந்து கொண்டே செஸ் போட்டி.. அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
நிகழ்ச்சியில் தமிழர் பாரம்பரை உடையான வேட்டி, சட்டையில் அவர் காட்சியளித்தார். மேலும், மோடி அணிந்திருந்த ஆடையில், சதுரங்க அட்டையை குறிக்கும் வகையிலான கருப்பு, வெள்ளை கரை இடம்பெற்றிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.