தமிழகத்தில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக 2013ம் ஆண்டு அம்மா உணவக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இந்த திட்டம் கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் அம்மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் உணவகங்கள் அமைந்துள்ளதோடு அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பயணிகளுக்கும், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகன டிரைவர்கள், ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் உணவுகள் கிடைக்க ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை படிக்காமல் சிலர் எதிர்கின்றனர்: அமைச்சர் முன்னிலையில் ஆளுநர் ரவி பேச்சு
போக்குவரத்து அல்லாத வாகனங்களில் ஓட்டுனர்கள் குறைந்த ஊதியம் பெறுவதாகவும், சாலையோர உணவகங்களில் அதிக விலை கொடுத்தாலும், அவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்களை அமைக்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிடும்படி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.