சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி ராம்லட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகள் சத்தியப்பிரியா (20) தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சத்யபிரியாவை ஆலந்தூர் ராஜா தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தயாளன் என்பவரது மகன் சதீஷ் (30) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சதீஷின் காதலை சத்யா மறுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ந் தேதி சத்யா கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது தோழியுடன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதிஷ் சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். இதில் சத்யா ரெயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சதீஷை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மகள் உயிரிழந்த சம்பவத்தில் மனமுடைந்த சத்யபிரியாவின் தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம் தலைமை காவலராக இருந்த தாயார் ராமலட்சுமி, தனது 7 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்யாவின் தங்கையான 7 வயது சிறுமி, தனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்து நிற்கதியாய் தனித்து நிற்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News